ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ஜோதிடப் பாடங்கள் 5.asdf

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அந்த ஜாதகத்தில் லக்னத்தை முதல் வீடு என்கிறோம். அதிலிருந்து எண்ணி வரும் 5ம் வீட்டை புத்தி ஸ்தானம் என்றும், புத்திர ஸ்தானம் என்றும், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் கூறுகிறோம். 9ம் வீட்டைப் பாக்கிய ஸ்தானம் என்றும் கூறுகிறோம். 1, 5, 9ம் வீடுகள் திரிகோண ஸ்தானங்கள் எனப்படும். 1, 4, 7, 10ம் வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் எனப்படும். 2ம் வீடு தன, வாக்கு, குடும்ப ஸ்தானம் எனப்படும். 11ம் வீடு லாப ஸ்தானம் எனப்படும். இதை சென்ற பாடத்திலேயே கூறியிருக் கிறேன். இப்போது மீண்டும் இதையே நியாபகப் படுத்துகிறேன்.  இப்போது நான் மேலே சொன்ன வீடுகள் யாவும் சுப வீடுகள். அதோடு போன பாடத்தில் சொன்ன சர, ஸ்திர, உபய ராசிகளையும் மீண்டும் நியாபகப் படுத்து கிறேன். மேஷம், கடகம், துலாம், மகரம் இவை நான்கும் சர ராசிகள். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை நான்கும் ஸ்திர ராசிகள். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவை நான்கும் உபய ராசிகள்.
மேலே சொன்ன 1, 5, 9, 4, 7, 10, 11, 2 ஆகிய வீடுகள் யாவும் சுப வீடுகள். ஆனால் இந்த சுப வீடுகளில் சில வீடுகள் பாதக வீடுகளாகவும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சர ராசி ஒருவருக்கு லக்னமாக வந்தால் 11வது வீடாகிய லாப வீடே பாதக வீடாக செயல்படும். அதாவது மேஷ ராசி லக்னமாக வ்ந்தால் அதாவது மேஷம் லகனமாக வந்தால் 11ம் வீடாகிய கும்ப ராசியாகிய லாப ஸ்தானமே பாத்க ஸ்தானமாக செயல்படும். அதே போல் இன்னோரு சர ராசியாகிய கடக ராசியே லக்னமாக வந்தால் அதாவது கடகம் லக்னமானால் இதன் 11ம் வீடாகிய ரிஷப ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். துலா லக்னமாக வந்தால் சிம்ம ராசியாகிய 11ம் வீடு பாதக ஸ்தானமாக செயல்படும். மகர லக்னமாக வந்தால் இதன் 11ம் வீடாகிய விருச்சிக ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். இதே போல் ஸ்திர ராசியான ரிஷபம் லக்னமாக வந்தால் 9ம் வீடாகிய பாக்கிய ஸ்தானமான மகர ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னோரு ஸ்திர ராசியான சிம்மம் லக்னமாக வந்தால் 9ம் வீடான மேஷ ராசி பாதக ஸ்தானமாக் செயல்படும். விருச்சிகம் லக்னமாக வந்தால் கடக ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். கும்பம் லக்னமாக வந்தால் துலா ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். இதே போல் உபய ராசியான மிதுனம் லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான களஸ்திர ஸ்தானமான தனுசு ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். கன்னி லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான மீன ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். தனுசு லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான மிதுன ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். மீனம் லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான கன்னி பாதக ஸ்தானமாக செயல்படும். எனவே ஒரு ஜாதகத்தை ஆராயும் போது அந்த ஜாதகத்தில் முதலில் எது பாதக ஸ்தானம் என்பதை ஆராய்ந்து பதில் கூறினால் பலன்கள் மிகச் சரியாக இருக்கும். அது மாத்திரம் அல்லாமல் அனைத்து லக்னங்களுக்குமே 2, 7ம் வீடுகள் மாரக ஸ்தானைங் களாகும். மாரகம் என்றால் மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்பான விஷயங்கள் என்று அர்த்தம். இதில் 2ம் அல்லது 7ம் வீட்டில் உள்ள கிரகங்களின் திசா காலம் நடக்கும் பொழுது அவை மாரக பலனைக் கொடுக்கும் என்று சொல்லி விட முடியாது. பால்யவயதாகவோ அல்லது மத்திம வயதாகவோ இருக்கும் நேரத்தில் இந்த திசா காலங்கள் வந்தால் 2ம் வீட்டிலிருக்கும் கிரகத்தின் திசா காலம் வந்தால் தன, குடும்ப, வாக்கிற்குரிய பலன்களை அந்த கிரகம் 2ம் வீட்டில் எந்த நிலையில் இடம் பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்து நல்ல அல்லது கெட்ட பலன்களாகச் செய்யும். 7மிடத்தில் ஒரு கிரகம் இருந்து திசா நடத்தினால் திருமண வாழ்க்கை எப்படி என்பது பற்றிச் சொல்லும்.  மாரக பலன்கள் எப்போது நடைபெறும் என்றால் அந்த ஜாதகனது ஆயுள் ஸ்தானம், சனியின் நிலைமை இவர்களைப் பொறுத்துத்தான் 2, 7ம் வீடுகள் மாரக பலன்களை தனது புக்திக் கால்த்தில் வழங்குவார்கள். எனவே 2, 7ம் வீட்டில் உள்ள கிரகைங்களின் திசா காலங்கள் வந்து விட்டால் மாரகத்தைச் செய்யும் என்று தவறான முடிவுக்கு வரக் கூடாது.  
ஆக 1, 4, 7, 10, 5, 9, 2, 11 ஆகிய வீடுகள் எப்பொழுது நல்லவர்கள், எப்போது கெட்டவர்கள் என்பதை மிக நன்றாக துல்லியமாக ஆராய்ந்த பின்னரே பலன்களைத் தெளிவாகச் சொல்ல முடியும் என்பது தெரிகிறது.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

ஜோதிடப் பாடங்கள் 4.

ஒரு ராசிச் சக்கரத்தில் 12 ராசிகள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த 12 ராசிகளை அந்தக் காலத்திலேயே ரிஷிகள் மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளையும் சர ராசிகள் என்றும், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கு ராசிகளையும் ஸ்திர ராசிகள் என்றும், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளையும் உபய ராசிகள் என்றும் வகைப் படுத்தியிருக்கிறார்கள். அதன் விளக்கத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
  மீனம்
 உபயம்
 மேஷம்
    சரம்                    
ரிஷபம்
  ஸ்திரம்
 மிதுனம்
  உபயம்
  கும்பம்
  ஸ்திரம்

         ராசிக்கட்டம்
 கடகம்
  சரம்
  மகரம்
   சரம்
 சிம்மம்
   ஸ்திரம்
 தனுசு
  உபயம்
 விருச்சிகம்
   ஸ்திரம்
 துலாம்
   சரம்
கன்னி
   உபயம்

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ஜோதிடப் பாடங்கள் 3.

மீனம்
 12
 மேஷம்
 1  (லக்னம்)
ரிஷபம்
 2
மிதுனம்
 3
கும்பம்
 11

ராசிக்கட்டம்
கடகம்
 4
மகரம்
 10
சிம்மம்
 5
தனுசு
 9
விருச்சிகம்
 8
துலாம்
 7
கன்னி
 6
ஒரு ஜாதகத்தில் இடம் பெறும் ராசிக் கட்டத்தில் 'ல' என்றோ, அல்லது 'லக்' என்றோ, அல்லது 'லக்னம்' என்றோ குறிப்பிட்டிருக்கும் ராசியே முதல் வீடாகும். இங்கே கொடுத்திருக்கும் ராசிக் கட்டத்தைப் பாருங்கள். இங்கே 'லக்னம்' என்று குறிப்பிட்டிருக்கும் ராசி மேஷ ராசி. எனவே இதுவே முதல் வீடு. இதிலிருந்து வரிசைக் கிரமமாக எண்ணினோம் என்றால் ரிஷபம் 2வது வீடு. மிதுனம் 3வது வீடு. கடகம் 4வது வீடு. சிம்மம் 5வது வீடு. கன்னி 6வது வீடு. துலாம் 7வது வீடு. விருச்சிகம் 8வது வீடு. தனுசு 9வது வீடு. மகரம் 10வது வீடு. கும்பம் 11வது வீடு. மீனம் 12வது வீடு.  இனி இந்த 12 வீடுகளின் காரக பலன்களைப் பார்க்கலாம். காரக பலன் என்றால் ஒரு ராசியானது என்னென்ன விஷயங்களைப் பற்றிச் சொல்கிறது என்று அர்த்தம். அதோடு லக்னம் முதல் 12 வீடுகளுக்கும் ஒவ்வொரு கிரகங்கள் காரகர்களாக அமைவார்கள். அவர்களையும் கீழே கொடுத்திருக்கிறேன். ஒரு ஜாதகத்தில் லக்னமாகிய முதல் வீட்டைக் கொண்டு தலை, உடல், உயிர், அவயவங்கள், சுபாவம், ஆயுள், சந்தோஷம், அறிவு, பிரபலம், கெளரவம், பலம், ஆரோக்கியம், செயல் திறன், சுய மரியாதை, கர்வம், அமைதி, பாண்டித்யம், வருத்தம், அதிருப்தி, இழுக்கு, கண்ணியம், வயது, ரூபம் (தோற்றம்), நிறம், வடுக்கள், சுகம், துக்கம், சாகஸம் இவற்றை அறிய முடியும். இவையே லக்னத்தின் காரக பலன்கள். இவை அனைத்திற்கும் காரகர் சூரிய பகவான். லக்னத்திலிருந்து 2ம் வீட்டின் காரக பலன்களை இனி பார்க்கலாம். பெரும் செல்வம், பருவம், நெற்றி, மனைவி, முகம், வலது கண், படிப்பு, உணவு, தன வருவாய், குடும்பம், சொல் வன்மை, உண்மை, நேர்மை, நாக்கு, மூக்கு, பாண்டித்யம், வித்தை, நண்பர்கள், குடும்ப உறவு, திடபுத்தி, வியாபாரத்தில் வருவாய், செல்வம், சேமிப்பு, பரோபகார சிந்தனை, திட மனது, பணிவு, சாஸ்திரங்களில் நம்பிக்கை, சிக்கனம், பொய், கபடு, கலை இவற்றை அறிய முடியும். இவையே லக்னத்திலிருந்து 2ம் வீட்டின் காரக பலன்கள். இவை அனைத்திற்கும் காரகர் குரு பகவான். 
லக்னத்திலிருந்து 3ம் வீட்டின் காரக பலன்களை இனி பார்க்கலாம். வீரம், இளைய சகோதரம்,  வலது காது, பராக்கிரமம், காதில் அணியக் கூடிய பொன் நகைகள், காது, நோய், இசை, துணைவர்,  ஆளடிமை, தைரியம், தீரச் செயல்கள், மனக் குழப்பம், சித்தப் பிரமை, தெளிவு, கனவுகள், உறவினர்கள்,  அலைதல், நற்பண்பு, பொழுது போக்கு, உடல் வலிமை, உடல் வளர்ச்சி இவை யாவும் 3ம் வீட்டின் காரக பலன்கள். இவை அனைத்திற்கும் காரகர் செவ்வாய் பகவான்.


சனி, 11 பிப்ரவரி, 2012

ஜோதிடப் பாடங்கள் 2

ஒரு மனிதன் பணக்காரனாகவோ, அல்லது ஏழையாகவோ பிறப்பதும், அல்லது ஒரு ஏழை பணக்காரன் ஆவதும், பணக்காரன் ஏழை ஆவதும் அவரவர் ஜாதக ரீதியாகவே நடைபெறுகின்றன. ஒரு ஜாதகத்தில் 12 ராசிகள் இடம் பெறுகின்றன. இந்தப் ப்ன்னிரெண்டு ராசிகளுக்கும் 9 கிரகங்கள் அதிபதியகிறார்கள்.  கீழே அதன் விளக்கப் படத்தைக் கொடுத்திருக்கிறேன். 
இதே போல் இந்த ஒன்பது கிரகங்களுக்கும்  உரிய வீடுகளைப் பற்றியும் (Houses of Planets) மற்ற வீடுகளில் இருக்கும் போது அவைகளுக்கு உள்ள சக்தியைப் (Power) பற்றியும் உங்களுக்கு அட்டவணையாக்கித் தந்துள்ளேன். அதாவது சக்தி என்பதன் அர்த்தம் என்ன்வென்றால் எந்தெந்த வீட்டில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சி, உச்சம் போன்ற பலன்களைச் செய்கின்றன? என்ற விளக்கத்தைக் கொடுத்திருக்கிறேன். அதோடு எந்த வீட்டில் பகை, நட்பு என்ற விளக்கத்தையும் கொடுத்திருக்கிறேன். பொதுவாக ஒரு ராசிச் சக்கரத்தில் 12 ராசிகள் உண்டு. இந்த பன்னிரெண்டு ராசிகளில் ஒரு வீடு 'லக்னம்' என்பதே ஆகும்.  இந்த 'லக்னம்' என்பதை ஜோதிடர்கள் ஜாதகங்களில் 'லக்னம்' என்றோ, அல்லது 'ல' என்றோ, அல்லது 'லக்' என்றோ குறிப்பிட்டிருப்பார்கள். இந்த வீட்டையே முதல் வீடாகக் கொண்டு ஜோதிடர்கள் அவரவர்க்குரிய பலன்களைச் சொல்வார்கள். லக்னம் என்றால் என்ன? ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பூமியில் வந்து பிறக்கும் நேரத்தின் அந்த மையப் புள்ளிதான் 'லக்னம்' என்பதாகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது முதலான 9  கிரகங்களும் அந்த 'லக்னம்' என்ற மையப் புள்ளியி லிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றனவோ அதன் படி அந்த ராசிச் சக்கரத்தில் இடம் பெறுவார்கள். 'லக்னம்' இடம்பெறும் வீட்டை 1ம் வீடு என்றும், அதற்கடுத்த வீடுகளை வரிசைக் கிரமமாக எண்ணிப் பார்க்க 12 வீடுகளையும் தெரிந்து கொள்ளலாம். அவற்றில் அதாவது லக்னம் முதல் 12  வீடுகளில் எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன்களை அந்தந்த கிரகங்களின் திசா காலங்களில் செய்வார்கள். இதனை உதாரண ஜாதகங்களோடு இனி வரும் பாடங்களில் பார்க்கலாம். 

வியாழன், 9 பிப்ரவரி, 2012

ஜோதிடப் பாடங்கள் பகுதி 1.



ஜோதிட சாஸ்திரம் என்பது மிகமிக நுட்பம் வாய்ந்தது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை அவன் கடந்து வந்திருப்பான், என்னென்ன விஷயைங்களை அவன் அனுபவிக்கப் போகிறான் என்று மிக அற்புதமாக இந்த சாஸ்திரமானது அவரவர் ஜாதக ரீதியாக உண்மையை எடுத்துரைக்கும். இங்கே ஜோதிட விஷயங்களைப் பற்றிய மிக முக்கியமான அடிப்படை விஷயங்களைப் பற்றிக் கூறுகிறேன்.     ஜோதிட சாஸ்திர ரீதியாக 12 (பன்னிரெண்டு ராசிகள் உண்டு. அவையாவன:
 1. மேஷம்,
 2. ரிஷபம்,
 3. மிதுனம்,
 4. கடகம்,
 5. சிம்மம்,
 6. கன்னி,
 7. துலாம்,
 8.விருச்சிகம்,
 9. தனுசு,
10. மகரம்,
11. கும்பம்,
12. மீனம்.   
ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் உண்டு. அவையாவன: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியோர். 12 (பன்னிரெண்டு) ராசிகளுக்கும் இந்த ஒன்பது கிரகங்களே அதிபதிகளாக வருகிறார்கள்.  
மேஷம் - செவ்வாய்
ரிஷபம் - சுக்கிரன்
மிதுனம் - புதன்
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
கன்னி - புதன்
துலாம் - சுக்கிரன்
விருச்சிகம் - செவ்வாய்
தனுசு - குரு
மகரம் - சனி
கும்பம் - சனி 
மீனம் - குருஜோதிட சாஸ்திர்த்தில் இந்த ஒன்பது கிரகங்கள் போக 12 ராசியிலும் 27 (இருபத்தியேழு) நட்ச்த்திரங்கள் இடம் பெறுகின்றன. அவையாவன: 
நட்சத்திரங்கள் விவரம்
இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களையும் நன்கு மனதில் இருத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதே போல் திதிகள் 15 (பதினைந்து) இருக்கின்றன. அதாவது இவை ஜாதகத்தில் அதாவது 12 ராசிகளில் இடம் பெறவில்லை. ஜோதிட சாஸ்திரத்திற்கு முக்கியமாகப் பஞ்சாங்கம் தேவை. இந்த பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களைக் கொண்டது. அவையாவன:  வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்பவையாகும். இதில் மேலே குறிப்பிட்டிருப்பது 27 நட்சத்திரங்கள் ஆகும். இங்கே கீழே குறிப்பிட்டிருப்பது 30 (முப்பது) திதிகள் ஆகும். 
ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம் ஆகும்.  திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்.  திதியில் பாதி கரணம். அதாவது திதி என்பது ஆகாயத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம். யோகம் என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லும் மொத்த தூரம். ஒரு ஜாதகம் கணிதம் செய்வதற்கு மேலே கூறிய அனைத்து விவரங்களும் தேவை. முக்கியமாக ஒரு குழந்தை பிறந்த ஊர், பிறந்த வருடம், தேதி, மாதம், பிறந்த நேரம் இவை இருந்தால்தான் அந்தக் குழந்தையின் ஜாதகத்தை கணிதம் செய்ய முடியும். ஒரு மனிதன் பிறக்கும் போது அதாவது அந்த மனிதனது ஜனன நேரத்தில் மேலே கூறிய 12 ராசிகளும், அவற்றில் இடம் பெற்றிருக்கும் 9 கிரகங்களும்,  இந்த கிரகங்கள் நிற்கும் 27 நட்சத்த்ரங்களுமே அந்த மனிதனின் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன. ஒருவன் நல்ல பெற்றோருக்குப் பிறப்பானா? அவர்கள் மூலமே வளர்க்கப் படுவானா?  அல்லது யார் மூலமாவது தத்துப் பிள்ளையாக வளர்க்கப் படுவானா? அவனது படிப்பு நிலைகள் திருப்திகரமாக இருக்கிறதா? அல்லது அவன் படிப்பில் தடைகள் உண்டா? வாழ்க்கையில் முன்னேறுவானா? அல்லது கீழ் நிலையிலேயே உழல்வானா? நல்லதொரு திருமண வாழ்க்கை அமையுமா? அல்லது திருமணத்தில் தோல்வியா? ஒரு மனைவியுடன் வாழ்வானா? அல்லது பல தாரங்கள் உண்டா? அரசு அல்லது தனியார் கம்பெனிகளில் வேலை பார்ப்பானா? அல்லது சொந்தத் தொழில் செய்வானா? தொழிலில் மேன்மை உண்டா? அல்லது தோல்வி ஏற்படுமா? அல்லது எந்தத் தொழிலும் இல்லாமல் வீணே கால்ம் கழிப்பவனா? தன் பிள்ளைகளுக்கு நல்லதொரு தந்தையாக வாழ்வானா? அல்லது பிள்ளைகளால் வெறுக்கப் படக் கூடிய வாழ்வு வாழ்வானா? பிள்ளைகளின் ஆதரவு உண்டா? இல்லையா? என்பன யாவுமே அவனது ஜாதகத்தில் இடம் பெற்றிருக்கும் கிரகங்கள் தனது திசா காலங்களில் அவனை எப்படி வழி நடத்திச் செல்கிறதோ அப்படித்தான் நடக்கும். இது முற்றிலும் உண்மையான விஷயமே. இனி அடுத்த இடுகையில் பாடம் 2ஐப் பார்க்கலாம். 

புதன், 8 பிப்ரவரி, 2012

2012 பிப்ரவரி மாத மேஷ, ரிஷப ராசி பலன்கள்

Aries Horoscope    மேஷ ராசி பலன்கள்:-  இந்த ராசி அன்பர்களின் ஜன்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண பாக்கியம், குழந்தை இல்லாதவருக்குக் குழந்தை பாக்கியம், நல்லதொரு தன வருவாய், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுதல், மற்றும் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல், பெரியவர்களின் ஆசி கிட்டுதல், தீர்த்த யாத்திரை செல்லுதல், வேலை இல்லாதவருக்கு வேலை வாய்ப்பு போன்ற விஷயங்களைச் செய்து கொடுப்பார். தந்தையின் மூலம் ஆதாயங்கள் உண்டு. தந்தையின் நிலை உயரும். நோய்வாய்ப் பட்டவர்கள் குணமடைய வாய்ப்புகள் உண்டு. நகைக் கடை வியாபாரிகள் உயர்வு காண்பார்கள். புதன் சஞ்சாரத்தினால் தாய்மாமன், நண்பர்கள் மூலம் இடையூறுகள் உண்டு. கணிதம், எழுத்து, இலக்கியம் சம்பந்தப் பட்டவர்கள் இன்னல்களைக் காண்பார்கள். சுக்கிரனின் சஞ்சாரத்தினால் பெண்கள் உயர்வு பெறுவார்கள். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். ஜவுளி, பால், அழகு சாதனப் பொருட்கள் ஆக்கம் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் நிகழும். புதிய பொருட்களின் அல்லது சொத்துகளின் சேர்க்கை நிகழும். 2ல் உலவும் கேது அவ்வப் போது சிற்சில இடையூறுகளைக் குடும்பத்தில் ஏற்படுத்திக் கொண்டு இருப்பார். உயர் கல்விப் ப்டிப்பில் நுழைந்தவர்களுக்கு சற்று முன்னேற்றமான காலமாக இது அமையும். மருத்துவச் செலவுகள் உண்டு. தாயின் நிலை கவனிக்கப் பட வேண்டி வரும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். 8ல் உலவும் ராகுவினால் இடையூறுகள் உண்டு. வேற்று மத, மொழி இனத்தவரால் இடையூறுகள் உண்டு. சூரியன் சஞ்சாரத்தால் அரசு அலுவலர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மாதத்தின் மத்தியில் சூரியன் இடம் மாறுவதாலும், புதன் சஞ்சாரத்தாலும் அரசு அலுவலர்களுக்குக் கெடுபிடிகள் அதிகமாகும். இவர்களுக்கு இது சற்று இது சோதனையான காலமாக இது அமையும். மேலிடத்தின் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. கோர்ட், கேஸ் விவ்கர்ரங்கள் இழுபறியாகும் நிலை ஏற்படும். எதிரிகள் பலம் பெறுவார்கள். சனியின் சஞ்சாரம் இவற்றிற்கெல்லாம் ஒத்துழைக்கும். எனவே எச்சரிக்கை தேவை. செவ்வாயின் சஞ்சாரத்தினால் தொழில் வலுவடையும். சட்டம், காவல், இராணுவம், நெருப்பு, ஆயுதம் சம்பந்தப் பட்டவர்கள் உயர்வு காண்பார்கள். ரியல் எஸ்டேட் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு வாக்கினால் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இரும்பு, எஃகுச் சாதனங்கள், எண்ணெய் வித்துக்கள் இன்னல்களை உண்டாக்கும். மாணவர்களுக்கு உகந்த காலம்.
Taurus Horoscopeரிஷப ராசி பலன்கள்:-  இந்த மாதம் உங்கள் ஜன்ம ராசியில் கேது சஞ்சாரம் திருப்திகரமாக உள்ளது. ராகுவின் சஞ்சாரம் திருப்திகரமாக இல்லை.  வேற்று மொழி, மத இனத்தவரால் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.  கூட்டுத் தொழில் செய்பவர்கள் இன்னல்களைச் சந்திப்பார்கள். தம்பதியருக்குள் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால் சுக்கிரனின் சஞ்சாரம் திருப்திகரமாக இருப்பதனால் இந்த மனக்கசப்புகள் உடனுக்குடன் நீங்கவும் வாய்ப்புகள் உண்டு.  ஜவுளி, பால், அழகு சாதனப் பொருட்கள் ஆக்கம் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் நிகழும். புதிய பொருட்களின் அல்லது சொத்துகளின் சேர்க்கை நிகழும். பெண்கள் உயர்வு பெறுவார்கள். 4ல் செவ்வாய் உலவுவதால் செய்தொழிலில் திருப்தி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சட்டம், காவல், இராணுவம், நெருப்பு, ஆயுதம் சம்பந்தப் பட்டவர்கள் உயர்வு காண்பார்கள். ரியல் எஸ்டேட் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். ஆனாலும் உடல் நிலை பாதிக்கப் படவோ அல்லது தாயின் உடல் நிலை பாதிக்கப் படவோ வாய்ப்புகள் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் நிகழும். புதிய பொருட்களின் அல்லது சொத்துகளின் சேர்க்கை நிகழும். சூரியனின் சஞ்சாரத்தால் அரசு உத்தியோகஸ்தர்களுக்கு அல்ல்து அரசியல்வாதிகளுக்கு இது சோதனையான காலமாகும். புதன் சஞ்சாரத்தினால் கணிதம், எழுத்து, இலக்கியம், பத்திரிகைத் தொழில் மேம்பட வாய்ப்புகள் உண்டு. சனியின் சஞ்சாரத்தினால் அவ்வப்போது உடல் நிலை பாதிக்கப் பட்டால் கூட பின்னர் அவை சரியாகி விடும். சனியின் சஞ்சாரத்தினால் கோர்ட், கேஸ் விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும் அல்லது வெற்றி உண்டாகும். போட்டி, பந்தயங்களில் வெற்றி உண்டு. குரு பகவானின் சஞ்சாரமும் இதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கும். இரும்பு, எஃகுச் சாதனங்கள், எண்ணெய் வித்துக்கள் முன்னேற்றம் கொடுக்கும். மாணவர்களின் நிலை உயரும்.                                                                                                

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

வரவேற்புகள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த வலைப்பதிவில் நான் கற்ற, கற்றறிந்த ஜோதிட விஷயிங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். உங்களுடைய முழுமையான ஆதரவு எனக்குக் கிடைக்கும் படி இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.உங்களுடைய ஜோதிட சம்பந்தமான சந்தேகங்கள் எதுவானாலும் அதற்கு  என்னால் இயன்ற அளவு பதில் கூற முயற்சிக்கிறேன். 
                                                                                                                             ஜோதிடர் சீதாலக்ஷ்மி.
                                                                                                                                      Cell:  94435 75398.

ஜோதிட சூக்சும விஷயங்கள்

ஜோதிட சம்பந்தமாக ஒரு மனிதன் தனது எதிர் காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைத்து ஒரு ஜோதிடரை அணுகும் போது அந்த ஜோதிடர் அவரது ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து அதாவது சூக்சும விஷயங்களை நன்கு ஆராய்ந்து அவரது கடந்த கால விஷயங்களை முதலில் கூறி விட்டார்கள் என்றால் அவர் சொல்லும் எதிர் கால பலன்களின் மேல் வந்தவருக்கு முழுவதுமாக நம்பிக்கை ஏற்பட்டு விடும். நான் இப்படிக் கூறுவதற்குக் காரணம் என்னவென்றால் ஜோதிடர்களின் மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வரும் காரத்தினால்தான். ஆகையால் அந்த சூக்சும விபரங்களைப் பற்றியே எழுத வேண்டும் என்பதே என் எண்ணம். பொதுவாக ஜாதகத்தில் இடம் பெற்றிருக்கும் ராசிகள் பன்னிரெண்டு என்பதும், இடம் பெற்றிருக்கும் கிரகங்கள் ஒன்பது என்பதும், இடம் பெற்றிருக்கும் நட்சத்திரங்கள் இருபத்தேழு என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்தப் பன்னிரெண்டு ராசிகளில் ஒன்பது கிரகங்களும் இருபத்தேழு நட்சத்திரங்களில் எந்தெந்த நட்சத்திரத்தில் நின்று கொண்டு தனது திசா காலத்தில் எவ்விதமான பலனை செய்கின்றன என்பது ஒரு சூக்சும விஷயம். உதாரணமாக என்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒருவருக்கு மேஷ லக்னம். இந்த லக்னத்திற்கு 11ம் வீடாகிய கும்ப ராசியில் சனி பகவான் ஆட்சி நிலையில் அமர்ந்து கொண்டு பலன்களை தனது திசா காலத்தில் செய்து முடித்து அதன் பிறகு அவருக்கு புதன் திசா காலம் நடக்கும் தறுவாயில் என்னிடம் வந்தார். அவரது ஜாதகத்தை ஆராய்ந்த போது அவரது சனி திசா காலம் அவரை மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கும் என்று தெரிய வந்தது. அதைப் பற்றி அவரிடம் கேட்ட பொழுது அவர் என்னிடம், 'எப்படி இவ்வாறு கூறுகிறீர்கள்' என்று கேட்டார். அதோடு சில ஜோதிடர்களை அணுகி அதாவது சனி திசா காலம் ஆரம்பித்த சில வருடங்களில் சொந்தத் தொழில் செய்யும் விஷயமாக அவர்களிடம் ஆலோசனை கேட்ட பொழுது அவர்கள் 'சனி பகவான் அவரது ஜாதகத்தில் லாப வீட்டில் இருப்பதால் ஏராளமான லாபத்தை சம்பாதிக்க முடியும். எனவே பேஷாகத் தொழில் தொடங்கலாம்' என்று கூறியதை நம்பி அவரும் தொழில் தொடங்கியிருக்கிறார். ஏகப் பட்ட நஷ்டம். 'ஏன் அந்த ஜோதிடர்களின் வார்த்தை பொய்த்தது' என்று அவர் என்னிடம் கேட்ட போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஜாதகத்தை நன்கு சூக்சுமமாக ஆராயாததன் விளைவுதான் இது. அப்போது அவரிடம் நான் கூறிய விஷயம் என்னவென்றால் 'ஒரு லக்னத்திற்கு 11ம் வீடு லாப வீடுதான். ஆனால் மேஷ லக்னம் சர லக்னம். சர லக்னங்களுக்கு லாப வீடாகிய 11ம் வீடே பாதக வீடாக இருப்பதனால் அந்த 11ம் வீட்டில் இடம் பெற்றிருக்கும் சனி பகவான் தனது திசா காலத்தில் பாதக விளைவுகளை த்தான் செய்வாரே தவிர நன்மைகளைச் செய்ய மாட்டார்' என்பதுதான். இங்கே நான் ஒரு சிறிய உதாரணம்தான் சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தெரியும். தற்போது நடந்து முடிந்த தேர்த்லில் ஜெயிக்கப் போவது தி.மு.கவா அல்லது அ.தி.மு.கவா என்று பல ஜோதிடர்களும் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் கூறினார்கள். அதில் ஒரு சில ஜொதிடர்கள் மட்டுமே மிகச்சரியாக அ.தி.மு.க கட்சிதான்வெற்றி அடையப் போகிறது  என்று மிகத் தெளிவாகக் கூறினார்கள்.ஏன் அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்று அவரது ஜாதகத்தை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் தெரியும். கீழே தற்போதைய  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.இதுதான் தற்போதைய  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஜாதகம்.இவருக்கு 24-11-2011 வரை ராகு திசா காலம் நடப்பில் இருந்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் நடந்த சமயமும், தேர்தல் முடிவுகள் வெளி வந்த சமயமும் அவருக்கு ராகு திசையில் செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருந்தது. ராகுவும், செவ்வாயும் இவருக்கு யோகத்தைக் கொடுப்பவர்கள். ஆகையால் இவரால் வெற்றி அடைய முடிந்தது. அன்றைய கோட்சாரமும் அவருக்கு ஒத்துழைத்தது. இதுதான் அவர் வெற்றி அடையக் காரணம்.